* ஒரு செயலில் ஈடுபட்ட பிறகு அதை உலகமே எதிர்த்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி வசமாகும். * பலனில் காட்டும் அக்கறையை விட செயலைச் செய்வதில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். * உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. * எதிலும் மிக உயர்ந்த நிலையும், மிகத் தாழ்ந்த நிலையும் ஒன்று போலவே தோன்றும். * துாய்மையானவர்கள், மாசற்றவர்கள் இப்பறவியிலேயே கடவுளைக் காண்கிறார்கள். * நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தி, துாய்மை, மகிழ்ச்சி நிறைந்திருக்கின்றன. * மனிதனுக்கு சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நல்வழி காட்டுகிறது. * எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். * செல்வம் பெருகியுள்ள காலத்தில் பணிவும், செல்வம் குறைந்த காலத்தில் துணிவும் அவசியம். * சுயநலமில்லாத தன்மை இருந்தால் கடவுளை நாம் தரிசிக்கலாம். * துன்பம் ஏற்பட அறியாமை தவிர வேறெதுவும் காரணமாக அமைவதில்லை. * சமூகத்தில் அளவுக்கு அதிகமான சட்டங்கள் இருப்பதே அந்தச் சமூகத்தின் அழிவுக்கான அறிகுறி. * ஆன்மிகத்தின் அடிப்படை லட்சியமே மனிதனுக்கு அமைதி தருவதுதான். * பகைமை, பொறாமையை வெளியிட்டால் அது மீண்டும் வட்டியும், முதலுமாக உங்களிடமே திரும்பும். * சூழ்நிலைக்கேற்றபடி மனிதன் வாழப் பழகினால் அதுவே நிம்மதிக்கான வழிமுறை. * கீழ்படிதலை அறிந்த ஒருவர் மட்டுமே கட்டளை இடுவதற்கான தகுதியைப் பெறுவார்.