ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள, சத்திய நாராயண பெருமாள் சன்னதியில், 1,008 விளக்கு ஏற்றி பூஜை நடந்தது. இது குறித்து, முரளிதர சுவாமிகள் கூறியதாவது: மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், இணையதள வழியாக பார்த்தனர். இவ்வாறு அவர் கூறினார்.