* புயல் காற்றில் மரம் சாய்ந்து விடும். ஆனால் புல் சிறிதும் பாதிக்காது. பணிவின் பெருமையை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். * பணிந்து போவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக ஆணவம் மறையும். * இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. * கோயிலில் மட்டும் கடவுளைக் காண்பதில் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுள் காண்பதே பக்தி. * சுயநலம் கொண்டவரைக் கண்டால் கடவுள் ஆயிரம் அடி விலகிச் செல்வார். * கிணற்றில் விழுவதற்கு ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால் விழுந்தவன் எழுந்து வர போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே. * பாய்ந்தோடும் நீரை தேக்கினால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அது போல ஐம்புலன்கள் வழியே சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுள் அருள் பெறலாம். * இன்றைய நண்பன் நாளை எதிரியாக கூட மாறலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைத் தாங்குபவருமான ஒரே நண்பன் கடவுள் மட்டுமே. * அனுபவம் இன்றி வெறும் சாஸ்திரத்தை மட்டும் படித்து காலம் கழிப்பது கூடாது. வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டிட வரை படத்தில் யாரும் குடியிருக்க முடியாது. * ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும். * நல்லதும் கெட்டதும் கலந்தது இந்த உலகம். தேனை மட்டும் சேகரிக்கும் தேனி போல நீங்கள் நல்லதை மட்டும் காண முயலுங்கள்.