முல்லா தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க இறைச்சி வாங்கி மனைவியிடம் அளித்தார். உணவு தயாராகி மேஜைக்கு வந்தபோது இறைச்சியைக் காணவில்லை. முல்லாவின் மனைவி இறைச்சி முழுவதையும் சாப்பிட்டிருந்தார். முல்லா மனைவியிடம் இறைச்சி எங்கே? எனக் கேட்டார். பூனை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தாள் மனைவி. மூன்று பவுண்டு இறைச்சியையுமா? என்றார் முல்லா. ‘ஆமாம்’ என்று சாதித்தார் மனைவி. அப்போது அங்கிருந்த பூனையை எடைபோட்டுப் பார்த்தார். பூனை மூன்று பவுண்டு எடை இருந்தது. ‘இதுவே பூனையின் எடை என்றால், இறைச்சி எங்கே?’ என்று கேட்டார் முல்லா. ‘இது வெறும் இறைச்சியின் எடைதான் என்றால் பூனை எங்கே’ எனக் கோபத்துடன் கேட்டார் முல்லா.