Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலை : ஆன்லைனில் ... இன்று பானு சப்தமி: சூர்ய வழிபாட்டு நாள் இன்று பானு சப்தமி: சூர்ய வழிபாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் கால கல்வெட்டு மேல்மலையனுாரில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பாண்டியர் கால கல்வெட்டு மேல்மலையனுாரில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
01:07

செஞ்சி: மேல்மலையனுாரில் ராஜ நாராயண பெருமாள் கோவிலில் பாண்டியர் கால கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ள ரா ஜ நாராயணபெருமாள் கோவிலில் விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் தலைமையில், பொறியாளர் பிரகாஷ், வரலாற்று மாணவர் அசோக்ரா ஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதில் பாண்டியர்கால கல்வெட்டு இருப்­பதை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து முனைவர் ரமேஷ் கூறியதாவது. மேல்மலையனூரில் உள்ள ராஜ நாராயணபெருமாள் கோவிலில் நடத்திய ஆய்வில் கோவிலின் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டு ஒன்று இருப்­பது தெ ரியவந்தது. இந்த கல்வெட்டு மூன்றாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனின் 30ஆவது ஆட்சியாண்டில்கி.பி., 1298 இல் பொறிக்கப்பட்டுள்­ளது.


சோழர் ஆட்சி முடிந்துபாண்டியர் ஆட்சி வந்த போது பெருமாள் கோவில் கட்டப்பட்டதையும் , இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில், பல்குன்றக்கோட்டத்தில் உத்தம சோழ வளநாட்டில், சிங்கபுரநாட்டில் மலையனூர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராஜேந்திரசோழ நல்லூர் என்ற பெயரும் இவ்வூருக்கு இருந்தது கல்வெட்டின் மூலம் தெரிகிறது. மேல்மலையனுாரை சேர்ந்த மாடமுடையான் காமன்பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர் கோவிலை கட்டியதை கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர் . சிங்கபுரம் என்பது செஞ்சிக்கு அருகே உள்ள சிங்கவரம் என்று ஊரை குறிக்கிறது. கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோவில் கட் டப்பட்டதையும், அக்காலத்தில் இருந்த நாட்டுப்பிரிவுகள் பற்றியும் அறிய முடிகிறது. சோழர், பாண்டியர் காலம் முதல் தற்போது வரை மலையனூர் என்ற பெயர் மாறாமல் ஆயிரம் ஆண்டுகளாக அதே பெயரில் அழை க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மேல்ம லையனுார் ராஜநாராயண பெருமாள் கோவிலில் ஆய்வாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ள

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar