திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக அஷ்டபுஜ துர்க்கைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அஷ்டபுஜ துர்க்கைக்கு உலக நன்மை வேண்டி நேற்று காலை 10:00 மணிக்கு மகாபிஷேகம், அலங்காரம், லலிதா திரிசதி அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் யாருமின்றி, உலகம் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு நலம் பெற, தினசரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிவாச்சாரியர்கள் தனிமையில் இப்பூஜையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.