சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி பெருந்திருவிழா அறிவிப்பு அறநிலையத் துறை வெளியிடாததால் குழப்பம் நிலவுகிறது.
குச்சனுார் சுரபி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார தலமான இக்கோயிலில் ஆடி மாத சனிக்கிழமைகள் பெருந்திருவிழாவா நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருக்கல்யாணம், தேரோட்டம், மூலவருக்கு உருவம் கொடுக்கும் ஐதீகம், சோணைகருப்பணன் கோயில் பொங்கல் திருவிழா என்று 5 சனிக்கிழமைகளில்திருவிழா களைகட்டும். வழக்கமாக வரும் சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற வேண்டும். கொரோனாவால் இந்தாண்டு பெருந்திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. அறநிலையத்துறையினர் கூறுகையில், கலிப்பணம் கழித்து கொடியேறினால் திருவிழா நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். கொடியேற்றம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.