மலைக்கோயிலுக்கு படிக்கட்டு அமைத்து கொடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2020 01:07
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் 15ம் நுாற்றாண்டில் உருவான மலைக்கோயிலுக்கு செல்ல வசதியாக பக்தர்களால் படிக்கட்டு அமைக்கப்பட்டது.எஸ்.மேட்டுப்பட்டி சித்தர் மலையில் 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் 2100 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு பக்தர்கள் கரடுமுரடான பாதைகளில் சென்று வந்தனர். படி வசதி இல்லாத சூழலில் பாறைகளை செதுக்கி படிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரை 1200 படிகள் அமைக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி தலைவர் பரமன் கூறுகையில், படிக்கட்டு அமைக்க அனுமதி பெறவே 2 ஆண்டுகள் ஆனது. பக்தர்களால் கோயில் புதுப்பொழிவு பெற்றுள்ளது. வரலாற்று சுவடுகளை பாதுகாப்போம். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு அரசு மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும், என்றார்.