பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
11:07
மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சஸ உற்ஸவம் பக்தர்கள், உபயதாரர்களின்றி நடக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இக்கோயில் ஆடி அமாவாசையின் போது சுந்தரராஜ பெருமாள்தேரோடும் வீதிகளில் எழுந்தருள்வார். பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவிற்கு சந்தனம் சாத்து உபயதாரர் மூலம் நடக்கும். பத்துநாட்கள் நடக்கும் பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் காலை, மாலை சுவாமி பல வாகனங்களில் எழுந்தருளல் நடக்கும். ஊரடங்கால் இந்தாண்டு ஜூலை 20 ஆடிஅமாவாசை கருட வாகன புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் தெற்குபக்கம் வழக்கம் போல் நடக்கும். பக்தர்கள், உபயதாரர்களுக்கு அனுமதியில்லை. ஜூலை 25 முதல் ஆக., 4 வரை பிரமோற்ஸவம் நடக்கும். ஜூலை 25 வழக்கம்போல அங்குரார்பணம் தொடர்பான பூஜைகள் நடக்கும். 26ல் கொடியேற்றம், 26 முதல் ஆக., 4 வரை காலை, மாலையில் சுவாமி எழுந்தருளுதல் நடக்கும்.ஜூலை 20 ஆடி அமாவாசை, ஆக., 3 ஆடி பவுர்ணமியில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி கோயில் சார்பில் நடத்தப்படும். ஆக.,3 நடக்க வேண்டிய தேரோட்டம் ஆக.,1 க்கு பிறகு அரசால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என கோயில் உதவி கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.