முன்னோரை வணங்குவதற்குரிய நாள் ஆடிஅமாவாசை. இந்நாளில் தீர்த்தக்கரைகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடியக்கரை, பாபநாசம், கன்னியாகுமரியில் பக்தர்கள் கூடி வழிபடுவர். சதுரகிரி மகாலிங்கம் கோயில் ஆடிஅமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவையாறில் திருநாவுக்கரசருக்கு கயிலாயக் காட்சி கொடுப்பதும் இதே நாளில் தான். இந்த ஆண்டு ஆடிஅமாவாசை ஜூலை20ல் வருகிறது.