பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவில் ஆளும் ஆரவவும் இன்றி யானையூட்டு விழா நடந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆடி மாதம், யானையூட்டு (உணவு வழங்குதல்) திருவிழா எல்லா ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும். புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா முடிந்தால் ஏராளமானோர் வடக்கு நாதர் சந்நிதிக்கு திரண்டு வருவது யானையூட்டு நிகழ்ச்சிக்காகும். கடந்த 38 ஆண்டுகளாக கொச்சி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட யானைகளை கலந்து கொள்ள வைத்து நடத்தும் இந்த யானையூட்டு நிகழ்ச்சியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தால் அரசு விதிமுறைகளை அனுசரித்து இன்று ஒரு யானை மட்டுமே கலந்து கொண்டுள்ளன.
தந்தூரி புலியனூர் சங்கரன் நம்பூதிரி தலைமையில் காலை கணபதி ஹோமம் நடந்தது. காலை தெற்கு கோபுர நடையில் தேவஸ்தானத்தின் முதிர்ந்த யானையான சிவகுமாருக்கு உணவு வழங்கி கோவில் மேல்சாந்தி செறுமுக ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பத்துவகை பழங்களுடன் புழுங்கல் அரிசியில் மூலிகைகள், வெல்லம், மஞ்சள் தூள், நெய், கரும்பு ஆகியவை கலந்து யானையூட்டு நிகழ்ச்சி நடந்தன. இந்நிகழ்ச்சியுடன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளுக்கு ஒரு மாத கால புத்துணர்வு முகாம் ஆரம்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.