ஒரு ஆண்டை அயனம் என்னும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் சொல்லப்படும். உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகும். தட்சிணாயன காலம் தேவர்களின் இரவுப் பொழுதாகும். பூலோகத்தில் ஓராண்டு காலம் என்பது வானுலக தேவர்களின் ஒரு நாளாகும். இதில் ஆடி மாதம் என்பது மாலை நேரத்தின் தொடக்கமாக உள்ளது. பகல் முடிந்து, இருள் சூழும் நேரத்தில் பயம் உண்டாவது இயல்பு. அதிலிருந்து உயிர்களை காக்கும்படி அம்பிகையை தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் வழிபடுவது அவசியம்.