தலயாத்திரை சென்ற அகத்திய முனிவர் பாவச்சுமையால் மக்கள் துன்பப்படுவது கண்டு வருந்தினார். தீர்வு வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாக மகாவிஷ்ணு எழுந்தருளினார். அவரிடம் அகத்தியர், பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வழிகாட்டுமாறு வேண்டினார். அதற்கு ஹயக்ரீவர், ‘‘ஜகன்மாதாவான பராசக்தியின் அருள்வடிவமான லலிதாம்பிகையை வழிபட்டால் துன்பம் தீரும்’’ என்று சொல்லி பராசக்திக்குரிய ஆயிரம் திருப்பெயர்களை ரகசியமாக உபதேசித்தார். அதுவே ‘லலிதா சகஸ்ரநாமம்’ எனப்படுகிறது. ஆடியில் இதைப் படித்தால் பாவம் பறந்தோடும்.