திருவாரூர்: திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆடிப்பூர இரண்டாம் நாள் விழா சிறப்பு வழிபாடு நடந்தது.
இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம். இங்கு ஆடிப்பூரம் விழா துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் 2ம் நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது. கொரோனா காரணமாக, பொது மக்கள் நலனை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.