Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ... பொள்ளாச்சி கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு பொள்ளாச்சி கோவிலில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு
எழுத்தின் அளவு:
ஆக.,5ம் தேதி வரை திருப்பதியில் முழு ஊரடங்கு

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
01:07

 திருப்பதி: திருப்பதியில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, இன்று(ஜூலை 21) முதல் ஆக.,5ம் தேதி வரை 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலில், மடப்பள்ளி ஊழியர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்த, முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். இது, தேவஸ்தானத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக பலியானது.

15 நாள் முழு ஊரடங்கு: இந்நிலையில் திருப்பதியில் முழு ஊரடங்கு பிறப்பித்து, சித்தூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சித்துார் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த, திருப்பதியில் இன்று முதல் ஆக., 5ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே உணவங்கள், கடைகள் திறந்திருக்கும். அதன் பின் பால், மெடிக்கல் ஷாப்கள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. திருப்பதியில் வசிப்பவர்கள், 11 மணிக்கு பின் வெளியில் நடமாட அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு, முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆந்திர அரசு, திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar