பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
01:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெற்றது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பொள்ளாச்சி அம்பராம்பாளையம், ஆனைமலை பகுதிகளில், ஆற்றங்கரைகளில், புரோகிதர்கள் வழிகாட்டுதலின்படி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். வால்பாறை வால்பாறை அடுத்துள்ள நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில், நேற்று மதியம், 1:00 மணிக்கு ஆடி அமாவாசை அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இதே போல், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில்களில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.