பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
03:07
அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதசுவாமி திருமடம், சுந்தர்ராஜ அடிகளார் கூறியதாவது:உலகெங்கும் வாழும், பல கோடி இந்துக்களின் வேத மந்திரமாக கந்த சஷ்டி கவசம் ஒலித்து வருகிறது. முருகப் பெருமானை உள்ளத்தில் நிறுத்தி வழிபடும் பக்தர்களின் நெஞ்சில், கருப்பர் கூட்டத்தின் கொச்சையான கருத்து, இடியாய் இறங்கி உள்ளது.அவரவர் மதம், அவரவர் நம்பிக்கை என்ற அடிப்படையில், இந்து தர்மம் தழைத்தோங்கி வருகிறது.
இதில், தேவையற்ற குழப்பத்தை இவர்கள் ஏன், ஏற்படுத்துகின்றனர் என்பது தெரியவில்லை. கந்த சஷ்டி கவசத்தில், அளவற்ற கருத்து உள்ள நிலையில், வேண்டுமென்ற திரித்து கூறியது கண்டிக்கத்தக்கது.அந்த கூட்டத்துக்காக சிலர் குரல் கொடுப்பது வேதனையிலும் வேதனை. எங்கும் நிறைந்துள்ள எம்பெருமான் பரம்பொருள் இந்த கூட்டத்துக்கு ஒரு வழி காட்டத்தான் போகிறார். கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதை, வன்மையாக கண்டிக்கிறோம்.இப்போது, முன்பை விட அதிகளவில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய துவங்கியுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.