விருதுநகர்:கொரோனா ஊரடங்கால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அனுமதியில்லாததால் அடைக்கப்பட்ட கோயில்கள் முன்பு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆற்றுப்படுகை, சிவன் கோயில் வளாகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. அனுமதி கிடைக்காததால் தர்ப்பணம் செய்ய இயலவில்லை.பக்தர்கள் அடைக்கப்பட்ட கோயில்கள் முன்பு விளக்கேற்றி சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தினர். பசுக்கள், காளைகளுக்கு அகத்திக்கீரை, பழங்களை வழங்கினர்.இயலாதோருக்கு அன்னதானமும் வழங்கினர். இதோடு அவரவர் வீட்டில் முன்னோர்களின் படங்களை வைத்து பூஜைகள் செய்தனர். சிலர் புரோகிதர்களை வீட்டிற்கு வரவழைத்து சமூக இடைவெளி விட்டு தர்ப்பணம் செய்தனர். அவர்களுக்கு காணிக்கையுடன் அரிசி, பருப்பு, காய்கறிகள், புத்தா டைகளை வழங்கினர்.