திருப்பதி : கொரோனா நோய் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று தேவஸ்தான அர்ச்சகர்கள் மீண்டு வீடு திரும்பினர். திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் தேவஸ்தான அர்ச்சகர்கள் 17 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருப்பதியில் உள்ள கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் குணமடைந்து நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு திரும்பினர். ஒருவர் மட்டும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். தற்போது குணமடைந்து திரும்பிய அர்ச்சகர்கள் 16 பேரும் இன்னும் 3 நாட்களில் ஏழுமலையான் கோவிலில் பணிபுரிய செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.