திருப்பரங்குன்றம், :கொரோனா பாதிப்பால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மார்ச் 20ல் சாத்தப்பட்டது. பக்தர்கள் வருகையின்றி தினமும் 8 கால பூஜை நடக்கிறது. பங்குனி திருவிழா, விசாக திருவிழா, ஊஞ்சல் திருவிழா ரத்து செய்யப்பட்டன. கோயிலுக்குள் கூட சுவாமி வலம் செல்லாதது பக்தர்களை வேதனைடைய செய்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயிலுக்குள் கோவர்த்தனாம்பிகை அம்பாள் வலம் வந்தார். கோயில் திறக்கும் வரை அனைத்து திருவிழாக்களிலும் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.