பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பொன்னுத்தம்மனுக்கு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடிமாத வெள்ளிக்கிழமையை ஒட்டி மஞ்சள் அபிஷேகம் நடந்தது.விழாவில் பொன்னுத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கோவை வடக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.