மதுரை, கொரோனா தொற்று ஒழியவும், உலக நன்மைக்காகவும் மதுரை ஆனையூர் ஆபீசர் டவுன் ஓடை விநாயகர் கோயிலில் மகா சுதர்சன ேஹாமம் நடந்தது.விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தன. வெங்கடேஷ் குருக்கள் நடத்தினார். பா.ஜ., துணை தலைவர் ஹரிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட தலைவர் சுசீந்திரன், நிர்வாகிகள் மூவேந்திரன், வெங்கடேஷ், முத்துக்கிருஷ்ணன், ஹிந்து முன்னணி செயலாளர் பாண்டிபிடாரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.