ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடந்தது. ஜூலை 15 ல் கொடி ஏற்றித்துடன் விழா துவங்கியது. ஊரடங்கினால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கோயிலுக்குள் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்று நிகழ்ச்சி நடந்தது.நேற்று இரவு அலங்கரித்த மணமேடையில் சுவாமி, அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளியதும், குருக்கள் மந்திரம் முழங்க அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, ஆடித் திருக்கல்யாண விழா நடந்தது. பின் சுவாமி, அம்மனுக்கு தீபாரதனை நடத்தினார். கோயில் இணை ஆணையர் செல்லதுரை, தக்கார் குமரன் சேதுபதி, உதவி ஆணையர் ஜெயா, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் ஊழியர்கள் பலர் தரிசனம் செய்தனர்.