புத்தேரி பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2020 12:07
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஷேத்திரம் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், கருட பகவானுக்கு கருட பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணியளவில் உலக நன்மை வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:15 மணியளவில் பிரகாரத்தில் உள்ள கருட பகவானுக்கு விசேஷ திருமஞ்சனம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின் போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.