சென்னை : கந்த சஷ்டி கவசம் இழிவு படுத்தப்பட்டதால் வீடுகள் தோறும் வேல்பூஜை நடத்த தமிழக பா.ஜ. திட்டமிட்டுள்ளது.
தமிழக பா.ஜ. சார்பில் கொரோனாவும் அயலகத் தமிழர்கள் உணர்வுகளும் என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை கூட்டம மாநில தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் பங்கேற்றார். அவர் பேசுகையில் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. ஹிந்து மக்களை ஒற்றுமைபடுத்த வேண்டும்; தி.மு.க.வை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும் என்றார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆக.9ம் தேதி வேல் பூஜை நடத்தி முருகரை வழிபடவும் தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தமிழக பா.ஜ. திட்டமிட்டுள்ளது.