சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2020 12:07
வடமதுரை: கொரோனா முன்னெச்சரிக்கையாக, கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை உள்ளது. வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத்துறையில் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடத்தி கொடியேற்றம் நடந்தது. ஆகஸ்ட் 7 வரை நடக்கும் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.