பதிவு செய்த நாள்
27
ஜூலை
2020
01:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள எண்ணேகொல்புதூர் கிராமத்தில், செந்தியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆடி, 18ல் நடப்பது வழக்கம். இத்திருவிழாவில் எண்ணேகொல்புதூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, ராயக்கோட்டை, திம்மாபுரம், குப்பச்சிப்பாறை, சின்னகொத்தூர், குருபரப்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி, தானம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபடுவர். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இந்த ஆண்டு திருவிழா நடைபெறாது என்றும், பொதுமக்கள் ஆடி, 18 அன்று இந்த கோவிலுக்கு வரவேண்டாம் என்றும், கிராம பொதுமக்கள் மற்றும் பஞ்., தலைவர் அறிவித்துள்ளனர்.