பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
11:07
சிவகங்கை : சிவகங்கை அருகே மல்லல் காட்டிற்குள் உள்ள 10ம் நுாற்றாண்டு கால புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
.இம்மாவட்டத்தில் பிரான்மலை, குன்றக்குடி, திருமலை, பூலாங்குறிச்சி, அனுமந்தக்குடி போன்ற இடங்களில் சமணர் படுகை, பிராமி எழுத்துக்கள் உள்ளன. இங்கு புத்த மதத்தினர் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், பெரிய அளவிலான அடையாளங்கள் இல்லை.ஆனால், சிவகங்கை அருகே மல்லலில் புன்செய் காட்டிற்குள் 10ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை உள்ளது.3 அடி உயரம், இரண்டே கால் அடி அகலத்தில் தியான கோலத்தில் உள்ள இந்த சிலை முகம், கால் பகுதி சேதமுற்றுகாணப்படுகிறது.இதைதொல்லியல் துறையினர் எடுத்து செல்ல முயற்சித்தும், அகற்ற முடியாமல் விட்டுள்ளதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது: மல்லல் என்றால் செழுமை என்று பொருள். நாச்சியம்மன்கோயில் கல்வெட்டில் 1081ம் ஆண்டு மன்னனுக்காக தலையை பலி கொடுத்தபடைத்தலைவரின் மனைவிக்கு முதலாம் குலோத்துங்க சோழன் நிலங்களை தானமாக கொடுத்ததாக உள்ளது. இப்பகுதியில் இன்றைக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் உள்ளன, என்றார்.