Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் ... மொபைல் ரிங் டோனாகும் வெற்றிவேல் வீரவேல் பாடல் மொபைல் ரிங் டோனாகும் வெற்றிவேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை இந்தியா திரும்புகிறது
எழுத்தின் அளவு:
பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட சிவன் சிலை இந்தியா திரும்புகிறது

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
04:07

 லண்டன்: கடந்த 1998 ல், ராஜஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி செல்லப்பட்ட 9ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிவன் சிலையை மீண்டும், இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

ராஜஸ்தானின் பரோலியில் கதேஸ்வர் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 1998 ம் ஆண்டு , 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 4 அடி சிலை திருடப்பட்டது. பின்னர் இந்த சிலை, பிரிட்டனில் உள்ள பழங்கால பொருட்களை சேகரிக்கும், தனியார் நிறுவனத்தில் இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் முயற்சியால், இந்த சிலை லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அது முதல், லண்டனில் மத்தியில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2017 ல் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், அந்த சிலையை ஆய்வு செய்து, ராஜஸ்தானின் கதேஸ்வர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, விரைவில் அந்த சிலை, இந்தியா கொண்டு வரப்பட்டு காதேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து கடத்தி செல்லப்பட்ட விலைமதிப்பில்லாத கலைப்பொருட்கள் மற்றும் தொல்லியல் பொருட்களை, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கண்டுபிடித்த பொருட்களில், இது தான் சமீபத்தியது ஆகும்.

உலக பாரம்பரிய சின்னமான, குஜராத்தின் ராணி கே வாவ் என்ற இடத்தில் திருடப்பட்ட பிரம்மா - பிரமணி சிலை, மீட்கப்பட்டு 2017 ல் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, இந்தியாவில் திருடப்பட்ட 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை லண்டன் போலீஸ் கமிஷனர் மீட்டார். பின்னர், 2019ம் ஆண்டு, மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் 2019 ஆக., 15ல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்த நவனீத கிருஷ்ணர் சிலையும், 2ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால சிலை ஒன்றும் அமெரிக்க தூதரக அதிகாரி, இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.ஜன., 8 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar