சேனியம்மன் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2020 02:07
சென்னை, ஆடி வெள்ளியை முன்னிட்டு தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் கேட் வாசலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. கோவில் பூட்டினாலும் பரவாயில்லை என கோவில் கேட் வாசலில் பொங்கல் வைத்து பெண் பக்தர்கள் வழிபட்டனர்.