நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிவில், ஒருவருக்கு ஒருவர் கட்டிப் பிடித்து வாழ்த்து சொல்லும் நடைமுறையை, நேற்று கைவிட்டனர்.குழந்தைகள் மட்டும் கட்டிப் பிடித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.