தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும் பழமொழி உண்டு. நாடு செழிக்க நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கு நாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். காவிரிக்கரை மாவட்டங்களில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தொடங்கும் முயற்சிகள் இனிதே நிறைவேறும். காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதிதாக திருமணமானவர்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றுவர். இதனை ‘தாலி பெருக்குதல்’ என்பர். வீட்டுத் தோட்டத்தில் கொடிகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி இடலாம் தங்க ஆபரணம் வாங்கவும் இது நல்லநாள்.