வரலட்சுமி விரதமான இன்று மகாலட்சுமிக்குகு மலர் துாவி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது அவளுக்குரிய 16 திருநாமங்களை சொன்னால் நன்மை பெருகும். ஓம் சவுந்தர்ய லட்சுமியே நமஹ-அழகு ஓம் சவுபாக்கிய லட்சுமியே நமஹ- சவுபாக்கியம் ஓம் கீர்த்தி லட்சுமியே நமஹ- புகழ் ஓம் வீரலட்சுமியே நமஹ- தைரியம் ஓம் விஜயலட்சுமியே நமஹ- வெற்றி ஓம் சந்தான லட்சுமியே நமஹ- நல்ல குழந்தைகள் ஓம் மேதா லட்சுமியே நமஹ- நல்ல புத்தி ஓம் வித்யா லட்சுமியே நமஹ- சிறந்த கல்வி ஓம் துஷ்டி லட்சுமியே நமஹ- மகிழ்ச்சி ஓம் புஷ்டி லட்சுமியே நமஹ- தேக பலம் ஓம் ஞானலட்சுமியே நமஹ- ஆன்மிக அறிவு ஓம் சக்திலட்சுமியே நமஹ- மன வலிமை ஓம் சாந்தி லட்சுமியே நமஹ- நிம்மதி ஓம் சாம்ராஜ்ய லட்சுமியே நமஹ- பதவி ஓம் ஆரோக்கிய லட்சுமியே நமஹ- உடல் நலம் ஓம் மகாலட்சுமியே நமஹ- மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும்