அயோத்தி பூமி பூஜைக்கு மயிலாடுதுறை காவிரியில் இருந்து புனிதநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2020 04:08
மயிலாடுதுறை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜைக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இருந்து புனிதநீர் மற்றும் புனிதமண் அனுப்பப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் இருந்து புனிதநீர், புனிதமண், பிரசாதம், பூஜைப் பொருள்கள் ஆகியன அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் மயிலாடுதுறையில் காசிக்கு வீசம் அதிகம் என்ற பெருமையைப் பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் இருந்து காவிரி நீர் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு இன்று அனுப்பப்பட்டது. விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக சார்பில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீலஸ்ரீ வீரராகவ சுவாமிகள் கலந்துகொண்டு, காவிரி நதியில் இருந்து புனிதநீர் மற்றும் மண் எடுத்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு அளித்தார். புனிதநீர் மற்றும் புனிதமண் விஹெச்பி காரியாலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.