புதுச்சேரி; ஆடி வெள்ளியை முன்னிட்டு, தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியில் தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி மகோற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு நேற்று காலை தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.