பதிவு செய்த நாள்
02
ஆக
2020
02:08
புதுக்கோட்டை; விநாயகர் சதுர்த்திக்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, புதுக்கோட்டை மாவட்டம், துவரடிமனை, மழையூர், பொன்னமராவதி பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்படும். இந்த ஆண்டு, விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு, சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.சிலை தயாரிக்கும் சங்கர் கூறியதாவது:ஊரடங்கு அமலில் இருப்பதால், சிலைகள் தயாரிப்பு மந்தமாகவே உள்ளது.
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களி மண்ணால், 3 முதல், 10 அடி வரை, மாஸ்க் அணிந்த விநாயகர் சிலை, கை கழுவும் விநாயகர் சிலைகளை, குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வருகிறோம்.சிலைகளுக்கு, ஆர்டர்வராததால், இந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. களிமண் எடுக்க உரிய அனுமதி அளித்து, நிதி வசதி, சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.