பதிவு செய்த நாள்
04
ஆக
2020
11:08
மேட்டுப்பாளையம்: ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு, காலையில் மூலவருக்கு திருமஞ்சனமும், திருப்பள்ளி எழுச்சியும் நடந்தது. திருப்பாவை முடிந்த பின்பு, கால சந்தி பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், தாயார் சன்னதி முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அரங்கநாத பெருமாளுக்கு புண்ணியமாகும் செய்து, பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் ஸ்தலதார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர், அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராஜா உட்பட அர்ச்சகர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். பிறகு சாற்றுமுறைக்கு பின், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.