மதுரை,மதுரை மாவட்ட வி.எச்.பி., தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: வி.எச்.பி., கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, மேலுார் தாலுகாக்களிலுள்ள கிராம கோயில்களிலும், நகரில் உள்ள சிந்தாமணி, அனுப்பானடி கோயில்களிலும் நாளை (ஆக., 5) காலை 11:30 மணிக்கு அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் நேரத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ராம நாம பாராயணம் நடக்கும். கோயில்களுக்கு செல்ல முடியாத ராம பக்தர்கள் வீடுகளில் ராம நாம பாராயணம் செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.