சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர்சாமி கோயில் ஆடி சந்தனக்குட விழாவில், 18-ம் படி கருப்பணசாமிக்கு சந்தனக்காப்பு சாற்றுதல் நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியில் சந்தனக்குட விழா நடக்கும். காப்பு கட்டி விரதமிருப்போர் சின்னாளபட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவனத்திற்கு சந்தனம் நிரம்பிய கலயங்களை ஊர்வலமாக கொண்டு செல்வர். ஊரடங்கால், ஊர்வலமின்றி சந்தன கலயங்கள் கோயிலுக்கு எடுத்த வரப்பட்டன. சந்தனத்தை தனி பாத்திரத்தில் சேகரித்து, 18-ம் படி கருப்பணசுவாமி, கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். சிறப்பு மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது.