அயோத்தியில் பூமி பூஜை: வீடுகளில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2020 01:08
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஆக., 5) நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அயோத்தியில் பூஜையை உலகம் முழவதும் உள்ள இந்துக்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ராமர் கோவில் பூமி பூஜை விழாவையொட்டி பெண்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.