பதிவு செய்த நாள்
06
ஆக
2020
12:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கோதண்டபாணி பஜனை கோவிலில், திருவிளக்கு பூஜையும், பஜனையும் நடந்தது.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, 1989ம் ஆண்டு, மேட்டுப்பாளையம் கோதண்டபாணி பஜனை கோவிலில், செங்கல் வைத்து, 48 நாட்களுக்கு பூஜையும், பஜனையும் செய்தனர். பின்பு அந்த செங்கலை அயோத்திக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அயோத்தியில், ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது.இதையடுத்து, கோவில் கட்டுமானப் பணிகள் தங்கு தடையில்லாமல் நடைபெற, மேட்டுப்பாளையம் கோதண்டபாணி கோவிலில், விளக்கு பூஜையும், பஜனையும் நடந்தது. பின்பு ராமர், சீதை, பாண்டுரங்கன், கிருஷ்ணர், ருக்மணி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.