அயோத்தி: ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக, நேற்று முன்தினம், அயோத்தி வந்த பிரதமர் மோடி, முதலில், ஹனுமன் கோவிலுக்கு சென்றார். அங்கு ஹனுமனுக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். இந்நிலையில், நேற்று, ஹனுமன்கர்கி கோவிலுக்கு, பக்தர்கள் அதிகளவில் வந்தனர். சரயு நதியில் புனித நீராடிவிட்டு அவர்கள், ஹனுமன் கோவிலுக்கு வந்தனர்.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஹனுமனை தரிசிக்க பக்தர்களை போலீசார் அனுமதித்தனர்.