பதிவு செய்த நாள்
07
ஆக
2020
02:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை தெப்பத் திருவிழா நடத்த உற்சவர் மண்டபம் எதிரில், ‘மினி’ தெப்பக்குளம் அமைத்து, தண்ணீர் நிரப்பப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து தரிசிப்பர். அந்த வகையில், ஆடிக்கிருத்திகை விழா, வரும், 10ம் தேதி, ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது. பின், 11ம் தேதி, ஆடிப்பரணியும், 12ம் தேதி, ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், 13ம்தேதி, இரண்டாம் நாள் தெப்பம், 14ம் தேதி, மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது. பக்தர்க ள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிகழ்ச்சிகளை , ‘யு டியூப்’ சேனல் மற்றும் கோவில் இணையதளம் மூலம், நேர டி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சரவணப்பொ ய்கையில் நடக்கும் தெப்பத் திருவிழாவிற்குப்பதிலாக, மலைக் கோவில் உற்சவர் மண்டபம் எதிரில் மினி தெப்பக்குளம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும், 11ம் தேதி தெப்பம் வெள்ளோட்டம் நடத்த, நேற் று, மினி தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. மினி குளத்தில் உற்சவர் முருகப்பெருமான் தெப்பத்தில் வைத்து, அஸ்திரர் மட்டும் குளத்தில் இறங்கி, முதல் நாள், மூன்று முறை ; இரண்டாம் நாள், ஐந்து முறை ; மூன்றாம் நாள், ஏழு முறை வலம் வருவதை, ‘யு டியூப்’ சேனல் மற்றும் கோவில் இணையதளத்தில் நேரடியாக பக்தர்கள் காணலாம்.