உளுந்துார்பேட்டை : அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜை விழாவையொட்டி உளுந்துார்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் செந்தில் தலைமை தாங்கி பூஜையை துவக்கி வைத்தார். அகில பாரத இந்து மகா சபா கடலுார் மாவட்ட தலைவர் வீரபத்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜிவ் காந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பரசுராமன், பொருளாளர் ஆறுமுகம், மாணவரணி மாவட்ட தலைவர் மணிகண்டன், சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.