Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிர்ஷ்ட தேவதை வேண்டாமே கவலை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மம் வாழ துணிந்து நில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
10:08

அர்ஜூனனுக்கு போதித்த பகவத்கீதை கருத்துகள்  இடம் பெற்றுள்ளன.
* தர்மத்தை நிலைநாட்டி நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் யுகம்தோறும் பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.
* எல்லா உயிர்களின் இதயத்திலும் கிருஷ்ணனாகிய நான் இருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் எல்லாம் ஆட்டுவிக்கப்படுகின்றன.
* இலை, பூ, தண்ணீர் என்று எதை அன்புடன் அளித்தாலும் ஏற்று அருள்புரிய தயாராக இருக்கிறேன்.
* குரு என்னும் மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்தால் பிறவிக்கடலை கடந்து விடலாம்.
* உயிர்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பைக் கடந்தாக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.
* கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
* எல்லா உயிர்களுக்கும் உதவிபுரிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
* மனம் போன போக்கில் மனிதன் வாழக் கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் கீழ்நிலையை அடைவான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்கியவன் ஞானம் அடைவான்.
* வானுலக தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து ஞானம் அடைய விரும்புகின்றனர்.
* நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்துாய்மை, அடக்கம் ஆகியவை அறிவுடையோரின் அடையாளங்கள். * பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
* உணவு, உறக்கம், உழைப்பில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் இருக்க வேண்டும்.
* வேலையின்றி சும்மா இருப்பது கூடாது.  செயலற்ற நிலையில் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.
* செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய எண்ணம் ஏற்படாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.
* அளவான பேச்சு, உணவில் கட்டுப்பாடு இருந்தால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
* நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவரைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்லலாம்.  
* கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் முற்றிலும் அழியும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar