கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும். இனிய நாக்கு எலும்பையும் நொறுக்கும்.* தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் திகட்டி விடும்.* இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நலம் தரும்.* நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறக்காதீர்கள்.* தர்மம் செய்வதை தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். * உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்.* சண்டையிடும் இடத்தில் விருந்து உண்பதை விட அமைதியுடன் பழஞ்சோறு சாப்பிடுவது மேல்!* புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நல்லதல்ல.* கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்.* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்.* வேண்டுதல்களும், இரக்கச் செயல்களும் கடவுளைச் சென்றடையும்.பொன்மொழிகள்