ஈரோட்டிலிருந்து 12கி.மீ., தூரத்திலுள்ள சிவத்தலம் பவானி. பவானி, அமுதநதி, காவிரி ஆற்றுடன் கூடும் முக்கூடல் தீர்த்தமுள்ள இத்தலத்தின் புராதனப்பெயர்திருநணா. இதில் நீராடியவருக்கு பாவம் எதுவும் நண்ணாது(தீண்டாது) என்பதால் இப்பெயர் வந்தது. ஆடிப்பெருக்கன்று இங்கு நீராட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். சிவன் சங்கமேஸ்வரர் என்ற திருநாமத்தோடும், அம்பிகை வேதமங்கையம்மையாகவும் வீற்றிருந்து அருள்கின்றனர். 18ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஆங்கில கலெக்டர் வில்லியம்காரோ, வேதமங்கையம்மையிடம் பக்தி கொண்டிருந்தார். 1804ல் இவர் உபயமாக அளித்த தந்தக்கட்டிலே, இன்றும் பள்ளியறையில் உள்ளது. படித்துறை வழியாக தீர்த்தத்திற்குச் செல்லும் வழியில் குழந்தை வரம் அருளும் சந்தானலிங்க பெருமானார் வீற்றிருக்கிறார். இங்குள்ள லிங்கத்தை (பாணம்) ஆவுடை யிலிருந்து (பீடம்) கழற்றி எடுத்து, மீண்டும்பொருத்தி விடலாம்.