காரைக்குடி: காரைக்குடி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிவெள்ளியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்தாண்டு கொரோனாவால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் களையிழந்து காணப்பட்டது.ஆடி என்பது அம்மனுக்கு உகந்த மாதமாகும்.ஆடிவெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு பூஜை, உட்பட பல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பாககொண்டாடப்படும். தற்போது, கொரோனா ஊரடங்கால்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பக்தர்கள் வெளியில் நின்றபடியே அம்மனை வணங்கினர். பக்தர்கள் கூழ்காய்ச்சி ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.