புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2020 03:08
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, நேற்று காலை 10:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம்; 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.