Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : ... தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாநகராட்சிகளில் சிறு கோவில்கள் திறக்க அனுமதி
எழுத்தின் அளவு:
மாநகராட்சிகளில் சிறு கோவில்கள் திறக்க அனுமதி

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
09:08

 சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். கடந்த மாதம், ஊராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டது. இம்மாதம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம்,10 ஆயிரத்திற்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளிலும், சிறியவழிபாட்டு தலங்களை, இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க, அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள, நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக, ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள்; சிறிய மசூதிகள்; சிறியதர்காக்கள்; தேவாலயங்கள் ஆகியவற்றில், மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், இன்று முதல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சி பகுதியில், இதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சி பகுதிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், அனுமதி பெற வேண்டும். இதே போல், தமிழகம் முழுதும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar